Dhanush:தனுஷுக்கு வைரல், ஐஸ்வர்யாவுக்கு பல்பு ஆகிடுச்சே

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரிந்து வாழ்கிறார்கள். மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோர் அம்மாவுடன் இருக்கிறார்கள். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் மகன்களுடன் நேரம் செலவிடுகிறார்
தனுஷ்
.

அப்படி அவர் தன் மகன்களுடன் இசைஞானி இளையராஜாவின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பலரையும் கவர்ந்தது. மேலும் தன் மகன்களுக்காக தான் எழுதிய பாடலை மேடையில் பாடி அசத்தினார் தனுஷ்.

தனுஷும், மகன்களும் இசைஞானியின் நிகழ்ச்சியை பார்த்து ரசித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி வைரலாகின. மகன்கள் மீது தனுஷுக்கு எவ்வளவு பாசம் என்று அனைவரும் பாராட்டினார்கள்.

இதையடுத்து இளையராஜாவை சந்தித்து பேசினார்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
. அப்பொழுது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அவர் தன் பாலிவுட் படமான ஓ சாத்தி சல்லுக்கு இசையமைக்குமாறு கேட்க இளையராஜாவை சந்தித்து பேசியிருக்கிறார். ஆனால் அந்த சந்திப்பு புகைப்படங்களை பார்த்தவர்களோ ஐஸ்வர்யாவை விளாசுகிறார்கள்.

தனுஷ் எது செய்தாலும் போட்டிக்கு எதையாவது செய்ய வேண்டியது. நான்லாம் ரொம்ப சந்தோஷமாக இருக்கேன் என்று காட்டிக் கொள்ள அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது. தனுஷை கடுப்பேற்றுவது எப்படி என்று யோசிப்பதை நிறுத்திவிட்டு, மகன்களுடன் நேரம் செலவிடுங்கள் என்கிறார்கள்.

தனுஷுக்கு ஒர்க்அவுட் ஆன
இளையராஜா
விஷயம், ஐஸ்வர்யாவுக்கு மட்டும் எதிராக திரும்பிவிட்டது.

கல்விக் கொள்ளையை தட்டிக் கேட்கும் தனுஷ்: என்ன நடக்கப் போகுதோ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.