அடாவடி ஓட்டுனர் கைது| Dinamalar

தட்சிண கன்னடா : சிக்னலில் நிற்காமல் அதை புறக்கணித்து வேகமாக பஸ்சை ஓட்டி, இரு சக்கர வாகனத்தில் மோதி, பஸ் தீப்பிடித்து எரிய காரணமான தனியார் பஸ் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.தட்சிண கன்னடா மங்களூரு ஹப்பன்கடேயில், தனியார் பஸ் இரு சக்கர வாகனத்தில் மோதியது. இதில், பஸ் முன்பகுதி எரிந்தது. படுகாயமடைந்த இரு சக்கர வாகனத்தில் வந்த டிலன், 26, வலது காலில் காயம் ஏற்பட்டு, சிகிச்சை பெறுகிறார்.விசாரணை நடத்திய போக்குவரத்து போலீசார், பஸ் ஓட்டுனர் பிஜு மோனு, 35, சிக்னலில் நிறுத்தாமல் வேகமாக ஓட்டி, பைக் மீது மோதியதை அறிந்தனர்.இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், வரும் 26 வரை நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.