`அரேஞ்சுடு கம் லவ்': `இதயத்தை திருடாதே' நாயகனுக்கும்; நியூஸ் ரீடர் கண்மணிக்கும் நிச்சயதார்த்தம்!

‘இதயத்தை திருடாதே’ தொடரில் நடித்துவரும் நவீனுக்கும், நியூஸ் ரீடர் கண்மணிக்கும் பெரியவர்கள் முன்னிலையில் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இருவருடைய குடும்பத்தினரும் கலந்து பேசி திருமணம் முடிவான நிலையில் இன்று இவர்களுடைய நிச்சயதார்த்த விழா நடைபெற்றிருக்கிறது.

கலர்ஸ் தமிழ் சேனலின் ‘இதயத்தை திருடாதே’ தொடரின் மூலம் சின்னத்திரைக்குள் நடிகராக அறிமுகமானவர் நவீன். தற்போது அந்தத் தொடரின் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்தத் தொடரின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நவீன். இவருக்கு அவரது ரசிகர்கள் ‘மக்கள் நாயகன்’ என்கிற பட்டத்தையும் அளித்திருக்கிறார்கள்.

கண்மணி – நவீன்

சன் தொலைக்காட்சி குழுமத்தில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிபவர் கண்மணி. இவருக்கும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கிராமப்புற பின்புலம் கொண்டவர். தன்னுடைய கடின உழைப்பினால் மீடியாத்துறைக்குள் நுழைந்து அதீத கவனம் பெற்றவர்.

இருவரின் வீட்டிலும் பேசி முடிவானதுதான் இந்தத் திருமணமாம். `அரேஞ்சுடு கம் லவ்’ மேரேஜ் என்கிறார்கள், இவர்களது நட்பு வட்டாரங்கள். இருவருக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது. விரைவில் திருமண தேதியும் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்மணி தன் காதலை நவீனுக்கு வெளிப்படுத்தும் வகையில் ‘NK” என மெஹந்தியினால் தனது கைகளில் எழுதியிருக்கிறார்.

வாழ்த்துகள் நவீன் – கண்மணி!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.