ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழக கட்சிகள் புறக்கணித்ததை தவிர்த்து இருக்கலாம்- எல் முருகன்

தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனால், திமுக உள்பட பல்வேறு தமிழக கட்சிகள் தேநீர் விருந்தில் கலந்துக்கொள்ளாமல் புறக்கணித்தனர்.
நீட் விலக்கு மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பப்படாமல் இன்னும் கவர்னரிடம் நிலுவையில் உள்ளதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழக கட்சிகள் புறக்கணித்ததை தவிர்த்து இருக்கலாம் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய அரசின் திட்டங்கள் தமிழத்தில் தான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்..
மருத்துவர்கள் எண்ணிக்கையில் இந்தியா 10 ஆண்டுகளில் சாதனை படைக்கும்- பிரதமர் மோடி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.