இன்னும் 15 வருஷத்துக்கு பாஜக ஆட்சிக்கு ப்ளான் போடும் ஆர்எஸ்எஸ்!

உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்
ஆர்எஸ்எஸ்
தலைவர்
மோகன் பகவத்
இன்று பங்கேற்றார்.

இந்த நிதழ்ச்சியில் அவர் பேசும்போது,”இந்தியாவை பற்றி அரவிந்தர், சுவாமி விவேகானந்தர் போன்ற மகான்கள் கூறியதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. பகவான் கிருஷ்ணரின் விருப்பப்படி இந்தியா எழுச்சி பெறும் என்று அரவிந்தர் தீர்க்கமாக கணித்துள்ளார்.

இந்தியா தற்போது அடைந்துவரும் எழுச்சியின் அடிப்படையில் பார்க்கும்போது, வரும் 15 ஆண்டுகளில் அகண்ட பாரதம் சாத்தியமாகும் என்பது எனது கணிப்பு. நமது இந்த இலக்கை வேகமாக அடைய நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

உலகம் முழுவதும் உள்ள அனைத்து விதமான மக்களையும் இந்தியா வரவேற்றுள்ளது. இந்தியா தனது இலக்கை அடைவதை யாராலும் தடுத்து நிறுத்த இயலாது.

நல்லனவற்றை செய்பவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கீதையில் கிருஷ்ணர் கூறியதை நாம் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று மோகன் பகவத் கூறினார்.

பாஜகவை ஆர்எஸ்எஸ் பின்புலத்தில் இருந்து இயக்கி வருகிறது என்று பரவலாக குற்றச்சாட்டு இருந்துவரும் நிலையில் கிருஷ்ணர், அரவிந்தர், விவேகானந்தர், அகண்ட பாரதம் என்று மோகன் பகவத் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.