இலங்கயில் அதிபர் பதவி விலக கோரி 7வது நாளாக போராட்டம்

கொழும்பு:
லங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி கொழும்பு நகரின் பல பகுதிகளில் மிகப் பிரம்மாண்டமான அளவில் போராட்டம் நடைபெற்றது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதால் உணவுப் பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. பெட்ரோலியப் பொருட்களுக்கும் மின்சாரத்துக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.இலங்கையில் புத்தாண்டு தொடங்கிய மகிழ்ச்சியைக் கூட மக்கள் கொண்டாடவில்லை.

இந்நிலையில் கொழும்பு நகரில் பிரம்மாண்டமான அளவில் போராட்டம் தீவிரம் அடைந்தது. பெருமளவில் மக்கள் திரண்டு நகரின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.