உரிய ஆவணங்கள் இல்லாததால் பேருந்தில் இருந்த சூட்கேசில் ரூ 1.90 கோடி ரொக்கப் பணம் பறிமுதல்..

ஆந்திர மாநிலத்தில் பேருந்து ஒன்றில், ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் பணத்தை, உரிய ஆவணங்கள் இன்றி, சூட்கேசில் எடுத்துச் சென்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஜக்கயாபேட்டை அருகே, கரிக்கபாடு என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக சென்ற ஒரு பேருந்தில் சோதனையிட்டபோது, சூட்கேசுக்குள் ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் இருந்தது.

அதை எடுத்துச் சென்ற இரண்டு பயணிகளிடம் அது தொடர்பாக, விசாரித்தபோது, பணம் தொடர்பான கணக்குகளோ, எந்தவித ஆவணமோ அவர்களிடம் இல்லை. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.