உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தில் ஜவுளித்துறையில் ரூ.19 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு ஒப்புதல்..!

புதுடெல்லி,
மத்திய அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், ஜவுளித்துறையில் முதலீடு செய்வதற்காக பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து 67 பரிந்துரை கடிதங்கள் மத்திய அரசுக்கு வந்தன. இதில் கின்னி பிலமென்ட்ஸ், கிம்பர்லி கிலார்க் இந்தியா லிட்., அர்விந்த் லிட். உள்ளிட்ட கம்பெனிகளின் 61 பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.

மத்திய அரசு அங்கீகரித்த இந்த 61 பரிந்துரைகளில், விண்ணப்பதாரர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் உத்தேச மொத்த முதலீடு ரூ.19,077 கோடி என மத்திய ஜவுளித்துறை செயலாளர் யு.பி.சிங் கூறியுள்ளார். இதன் மூலம் 2.40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.184,917 கோடி விற்றுமுதல் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.