உலகிலேயே முதல் முறை.. கண்ணுக்கு தெரியாமல் தாக்கும் ஆயுதத்தை சோதனை செய்த இஸ்ரேல்!



உலகிலேயே முதல் முறையாக புதிய வகை லேசர் ஆயுதத்தை இஸ்ரேல் வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.

அணு ஆயுதம் உட்பட பல்வேறு ஆயுதங்களை தன்வசம் வைத்துள்ள நாடான இஸ்ரேல், அயன் டோம் எனும் அதிநவீன வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பையும் கொண்டுள்ளது.

அயன் டோம் ஏவுகணைகளை நடுவானில் தாக்கி அழிக்கும் வல்லமையுடன் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், அயன் பீம் என பெயரிடப்பட்டுள்ள புதிய லேசர் வகை ஆயுதத்தை இஸ்ரேல் வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.

இந்த லேசர் ஆயுதம் வான் எல்லைக்குள் நுழையும் ஏவுகணை, ஆளில்லா விமானம், ராக்கெட் என எந்தவித பறக்கும் பொருளையும் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

இது குறித்து பேசிய இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட், ‘நாட்டின் எல்லைக்குள் வான்வழியாக நுழையும் எந்த ஒரு பொருளையும் இந்த லேசர் வான்பாதுகாப்பு அமைப்பு துல்லியமாகவும், சத்தமின்றியும் தாக்கி அழிக்கும். இது இலக்கை தாக்குவது கண்களுக்கு தெரியாது’ என தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் உலகிலேயே முதல் முறையாக லேசர் வான் பாதுகாப்பு ஆயுதத்தை வெற்றிகரமாக பரிசோதித்த முதல் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது.

முன்னதாக இஸ்ரேலுக்கும், காசா முனையில் செயல்பட்டு வந்த ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே கடந்த ஆண்டு நடந்த போரில் அயன் டோம் பாதுகாப்பு அமைப்பின் செயல்பாடுகள் உலக அளவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.    



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.