ஐபிஎல் : ஹார்திக் பாண்டியா அதிரடி : குஜராத் அணி 192 ரன்கள் குவிப்பு ..!

மும்பை,!
15-வது சீசன் ஐபிஎல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 23 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 24-வது லீக் போட்டி மும்பையில் உள்ள டி.ஒய் பட்டேல் மைதானத்தில்நடைபெறுகிறது.
இன்று நடைபெறும் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கத்தில் மேத்யூ வேட் (ரன் அவுட் ), 12 ரன்களிலும்  விஜய் ஷங்கர் 2 ரன்களிலும் ,சுப்மன் கில் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.பின்னர் வந்த ஹார்திக் பாண்டியா ,அபினவ் மனோகர் நிலைத்து நின்று ஆடி ரன்களை சேர்த்தனர். 
சிறப்பாக விளையாடிய அபினவ் மனோகர் 43 ரன்களில் ஆட்டமிழந்தார் . 
 கடைசி நேரத்தில் மில்லர் ,ஹார்திக் பாண்டியா இருவரும் பந்துகளை ,பவுண்டரி  சிக்சருக்கு பறக்கவிட்டனர் .
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி  4 விக்கெட்இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது . சிறப்பாக விளையாடிய ஹார்திக் பாண்டியா 52 பந்துகளில் 87 ரன்களும் ,  டேவிட் மில்லர்  14 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.