கடன்பெற அமெரிக்கா செல்லும் இலங்கைக் குழு..!

பன்னாட்டுப் பண நிதியத்தில் 400 கோடி டாலர் கடன்பெற இலங்கை நிதியமைச்சர் தலைமையிலான குழுவினர் திங்களன்று அமெரிக்காவுக்குச் செல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் உணவு, மருந்து, எரிபொருள் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடும், 12 மணி நேர மின்வெட்டும் நிலவுகிறது.

வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் உள்ள அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடைசிப் புகலிடமாகப் பன்னாட்டுப் பண நிதியத்தில் 400 கோடி டாலர் கடன்பெற இலங்கை திட்டமிட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.