காலியிடங்கள் நிரப்பாததால் முடங்கிய தேசிய கண்பார்வை இழப்பு தடுப்பு திட்டம்| Dinamalar

தேனி–அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கண் ஒளி பரிசோதகர்கள், கண் மருத்துவ உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாததால் தேசிய கண்பார்வை இழப்பு தடுப்புத் திட்டப் பணிகள் முடங்கி வருகிறது.

சென்னை அரசு மண்டல கண் மருத்துவமனையில் ஆண்டுதோறும் தலா 30 கண்ஒளி பரிசோதகர்கள், மருத்துவ உதவியாளர்கள் தேர்ச்சி பெற்று வெளியேறுகின்றனர். இங்கு பயின்றவர்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிகின்றனர். தற்போது 386 கண் மருத்துவ உதவியாளர் பணியிடங்களில் 47 பணியிடங்கள் காலியாக உள்ளன

.இந்தப் பணியிடங்கள் நிரப்பாததால் மாநிலத்தில் தேசிய கண்பார்வை இழப்பு தடுப்புத் திட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளை பரிசோதிக்கும் பணிகள் முடங்கி உள்ளன.தமிழ்நாடு கண் மருத்துவ உதவியாளர்கள் சங்க மாநிலச் செயலாளர் வெங்கடாசலம் கூறுகையில், சென்னை உயர்நீதிமன்றம் 2022 பிப்., 14ல் 47 பணியிடங்களையும், காலியாக உள்ள கண் ஒளி பரிசோதகர் பணியிடங்களையும் நிரப்ப உத்தரவிட்டது. இதுவரை நடவடிக்கை இல்லை,” என்றார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.