குஜராத்: ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் காங்.மூத்த தலைவர் ராஜ்குரு

குஜராத் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மூத்த தலைவருமான இந்திரனில் ராஜ்குரு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.இந்த தேர்தலுக்காக பாஜக -காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வரும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் இடத்தைப் பிடிக்க ஆம் ஆத்மி கட்சியும் தீவிரம் காட்டி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு குஜராத் சென்ற ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் மாற்றத்தை தர தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.
Not such an aam aadmi: Who is Indranil Rajguru, one of the richest Gujarat  leaders, to join AAP?

இந்த நிலையில் ராஜ்கோட் கிழக்கு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மூத்த தலைவருமான ராஜ்குரு, அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். பாஜகவைத் தோற்கடிக்க ஆம் ஆத்மி கட்சி, மாற்று ஆயுதமாக இருக்கும் என்பதால் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டதாக ராஜ்குரு தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.