கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் 5மணி நேரம் விசாரணை…

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாகஅதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் காவல்துறையினர் சுமார் 5மணி நேரம் விசாரணை நடத்தினர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கை திமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே விசாரிக்கப்பட்ட சாட்சிகள் மறு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திபூ, சதீசன், ஜம்சீர் அலி, பிஜின் குட்டி, ஜித்தின் ஜாய் ஆகியோரிடம் குன்னூர் காவல்துறையினர் ஏற்கனவே ஜனவரி மாதம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து மற்ற சாட்சிகளிடமும் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், வழக்கு சம்பந்தமாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் காவல்துறையினர் இன்று மீண்டும் விசாரணை நடத்தினர். ஏற்கனவே, 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆறுகுட்டியிடம்  விசாரணை நடத்திய நிலையில், இன்று மீண்டும்  தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சுமார்  5 மணி நேரத்திற்கும் மேலாக தனிப்படை போலீசார் நடத்திய விசாரணை நிறைவு பெற்றுள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.