சீன அரசின் அடக்குமுறையை எதிர்த்து ஷாங்காய் மக்கள் போராட்டம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஷாங்காய்: ஷாங்காய் நகரில் ஒமைக்ரான் எக்ஸ்இ பரவலை அடுத்து சீன அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த அடக்குமுறையை எதிர்த்து ஷாங்காய் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இரண்டரை கோடி மக்கள் வசிக்கும் சீனாவின் முக்கிய வர்த்தக நகரம் ஷாங்காய். இங்கு தற்போது ஒமைக்ரான் எக்ஸ்இ ரக வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனை அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். தங்களது வாழ்வாதாரம் கருதி முழு ஊரடங்கை நீக்கி தாங்கள் பணிக்குச் செல்ல அனுமதிக்குமாறு அவர்கள் ஷாங்காய் மாகாண அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வந்தனர். ஆனால் சீன அரசு தொடர்ந்து கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் பலர் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது சீன அரசு புதிய உத்தரவு ஒன்றை ஏற்றுள்ளது. இதன்படி கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சீன குடிமக்களுக்கு ஷாங்காய் மக்கள் தங்கள் இல்லங்களை அளிக்க சீன அரசு உத்தரவிட்டது. இதனால் கொதிப்படைந்த ஷாங்காய் குடிமக்கள் போலீசாருடன் மோதல் போக்கில் ஈடுபட்டனர். மேலும் பொது இடத்தில் இதனை எதிர்த்து போராடினர்.

latest tamil news

சீன கம்யூனிச அரசு சாலை மறியல், தர்ணா உள்ளிட்டவற்றை என்றுமே அனுமதித்ததில்லை. அவ்வாறு குடிமக்கள் போராடினால் அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவது தான் கம்யூனிஸ கொள்கையின் சாமர்த்தியம். ஆனால் தற்போது வீடின்றி தவிக்கும் ஷாங்காய் மக்கள் அரசின் அடக்குமுறையை மீறி தற்போது தங்களை கட்டுப்படுத்தும் போலீசாரிடம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.