டயர் வெடித்து சாலையில் தறிக்கெட்டு ஒடிய அரசு வாகனம்.. கள்ளக்குறிச்சி தனிதுணை ஆட்சியர், சிறுமி ஆகியோர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சியில் டயர் வெடித்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தறிகெட்டு ஓடி பொதுமக்கள் மீதும், மின்கம்பத்திலும் மோதிய விபத்தில், காரில் பயணித்த தனி துணை ஆட்சியர் சம்பவ இடத்திலேயே பலியாகினார்.

கார் மோதியதில் சாலையோரம் நடந்து சென்ற கோபிகா என்ற 11 வயது சிறுமியும் உயிரிழந்தார். தனித்துணை ஆட்சியர் ராஜாமணி அரசு சார்பில் கொடுக்கப்பட்ட மஹிந்திரா பொலிரோ வாகனத்தில் அதிகாரிகளுடன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென காரின் பின் பக்க டயர் திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நடந்து சென்ற பாதசாரிகளை மோதியதோடு, அங்கிருந்த மின் கம்பத்திலும் மோதி நின்றது.

இதில் காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த தனி துணை ஆட்சியர் ராஜாமணி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினார். காரில் 5 பேர் சென்ற நிலையில், பின் சீட்டில் அமர்ந்திருந்த 3 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. ஓட்டுநருக்கு மட்டுமே ஏர் பேக் வசதி இருந்ததால் அவர் காயங்களுடன் உயிர்தப்பியதாக கூறப்படுகிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.