தனியார் பேருந்து மீது இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து.. ஒரே பைக்கில் சென்ற 3 பேர் பலி..

வத்தலக்குண்டு அருகே பேருந்து மீது இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள முத்தலாபுரத்தை சேர்ந்த பிரகாஷ், சந்தோஷ் பாண்டி, கோபால் ஆகிய 3 பேரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் நிலக்கோட்டை நோக்கி சென்றனர். வத்தலக்குண்டு -மதுரை நெடுஞ்சாலையில் பூசாரிப்பட்டி பிரிவு அருகே, ஒரு பேருந்தை முந்திச் செல்ல முயன்றுள்ளனர்.

எதிரில் வாகனம் எதுவும் வருகிறதா என்பதை பார்த்து விட்டுத்தான் முந்த வேண்டும். ஆனால், அவர்கள், எதிரில் நிலக்கோட்டையில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தை கவனிக்காமல் முந்திச் சென்றதில், பேருந்து மீது இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது. இதில், பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கி 3 பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.