நாளை முதல் 2 ஆயிரத்து 100 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த இ.போ. ச திட்டம்

தமிழ், சிங்களப் புத்தாண்டுக்காக சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள், கொழும்பு உட்பட பிரதான நகரங்களுக்கு மீண்டும் திரும்புவதற்காக நாளை தொடக்கம் 2 ஆயிரத்து 100 பஸ் கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இந்த பஸ்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்துச் சபை வழமையாக 1,500பஸ்களை மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்தினாலும் இம்முறை 600 பஸ்களை மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.