பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்ட திருத்த விதிப்படி இழப்பீடு வழங்க உத்தரவு

மதுரை: திண்டுக்கல்லில் 2014-ல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு, 2016-ம் ஆண்டின் எஸ்சி, எஸ்டி சட்ட திருத்த விதிப்படி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் டி.புதுக்கோட்டையைச் சேர்ந்த பட்டியலின இளம்பெண் 2014-ல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக சத்திரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை கைது செய்தனர்.

இந்நிலையில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இழப்பீடு கேட்டு 2014-ல் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழக்கின் தற்போதைய நிலை அடிப்படையில் ரூ.1.80 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.