முன்னாள் பெண் செய்தி வாசிப்பாளருக்கு இன்ப அதிர்ச்சி தந்த கிம் ஜோங் உன்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பையோயங்க்: வட கொரியாவின் பழம் பெரும் டி.வி. செய்தி வாசிப்பாளருக்கு சொகுசு பங்களாவை பரிசாக வழங்கினார் அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன்.
வடகொரியாவின் ,டி. வி. செய்தி சேனலான கே.சி.என்.ஏ. எனப்படும் கொரியா சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சி என்ற செய்தி சேனில் 50 ஆண்டுகளாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றி ஒய்வு பெற்றவர் ரி-சூங்ஹே, 70.

latest tamil news

இவரது சேவையை பாராட்டி தலைநகர் பையோங்யங் நகரில் சொகுசு மாளிகையை அரசு சார்பில் வழங்கினார் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், இன்று நடந்த நிகழ்ச்சியில், ரி-சூங் ஹே வை நேரில் அழைத்து சென்று , பரிசாக வழங்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.