ம.பி: பெண்கள் மட்டும் வெளியே செல்ல அனுமதி

போபால்,
கார்கோன்- மத்திய பிரதேசத்தில், வன்முறையால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள கார்கோன் நகரில், பெண்கள் மட்டும் வெளியே செல்ல, இரண்டு மணி நேரத்திற்கு கட்டுப்பாடுகள்தளர்த்தப்பட்டன.
மத்திய பிரதேசத்தில், முதல்-மந்திரி  சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு, கார்கோனில் 10ம் தேதி ராமநவமி விழாவை முன்னிட்டு, ராம பக்தர்கள் ஊர்வலம் சென்றனர்.அப்போது, சில மர்ம நபர்கள், ஊர்வலம் சென்றவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், இருதரப்பிற்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், லத்தியால் அடித்தும் அவர்களை கலைத்தனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, கார்கோனில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. கலவரத்தில் தொடர்புடைய, 121 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்; 89 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நான்கு நாட்கள் அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு நேற்று காலை 10:00 மணி முதல், நண்பகல் 12:00 மணி வரை தளர்த்தப்பட்டது. இதில், அத்தியாவசிய பொருட்கள் வாங்க பெண்கள் மட்டும் வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதனால், ஏராளமான பெண்கள், கடைகளில் குவிந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.