ரஷ்யாவின் எல்லையோர நகரங்களில் உக்ரைன் குண்டுவீசித் தாக்குதல் ?

ரஷ்யாவின் எல்லையோர நகரங்களில் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் மீது ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

உக்ரைனின் இந்த தாக்குதலில் குழந்தை உட்பட 7 பேர் காயம் அடைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய விசாரணை குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், கனரக ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு ரஷ்ய வான் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த உக்ரைனின் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள், Bryansk பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களின் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ரஷ்ய எல்லைக்குள் உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அதிகார பூர்வமாக ரஷ்யா குற்றம்சாட்டியது இதுவே முதல் முறையாகும். ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டை உக்ரைன் நிராகரித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.