விஷ வாயு தாக்கி தந்தை மகன் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலில் கீழ் நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி தந்தை, மகன் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருமுல்லைவாயிலை சேர்ந்த பிரேம்குமார், அவரது வீட்டில் நீண்ட நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் இருந்த கீழ் நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்ய தொட்டிக்குள் இறங்கிய போது விஷ வாயு தாக்கி மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவரை காப்பாற்ற முயன்ற அவரது மகன் பிரதீப் குமார், பக்கத்து வீட்டுக்காரர்கள் சாரநாத், பிரமோத் குமார் ஆகிய 3 பேரும் மயங்கியதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து 4 பேருக்கு மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் பிரேம்குமார், பிரதீப் குமார், பிரமோத்குமார் ஆகிய மூவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சாரநாத் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக திருமுல்லைவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.