13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – 14 வயது சிறுவன் மீது போக்சோ!

மகாராஷ்டிராவில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 14 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சங்வி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன், தனது பக்கத்து வீட்டில் அடிக்கடி விளையாட செல்வது வழக்கம். அந்த வகையில், கடந்த 3-ம் தேதியன்றும் அந்த சிறுவன் அங்கு விளையாட சென்றிருக்கிறான். அப்போது அவர்களின் வீட்டில் 13 வயது சிறுமியை தவிர வேறு யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சிறுவன், அந்த சிறுமியை தனது பாலியல் இச்சைக்கு உட்படுமாறு மிரட்டியுள்ளான்.
image
அதற்கு சிறுமி மறுக்கவே, ‘நீ எனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் உனது அப்பா, அம்மாவை கொன்று விடுவேன்” என அவன் மிரட்டியுள்ளான். இதனால் பயந்துபோன சிறுமியை அந்த சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
இதையடுத்து, வீட்டுக்கு வந்த தனது பெற்றோரிடம் நடந்த விஷயத்தை சிறுமி கூறியிருக்கிறாள். இதனைத் தொடர்ந்து, அவர்கள் இதுதொடர்பாக சங்வி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதன்பேரில், கடந்த 13-ம் தேதி வழக்கு பதிவு செய்த போலீஸார், சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும், தலைமறைவாகியுள்ள அவனை தீவிரமாக தேடியும் வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.