15/04/2022: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 949 பேருக்கு கொரோனா பாதிப்பு 6 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 949 புதிய கொரோன  வழக்குகள் பதிவாகி உள்ளது.  810 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதுடன், 6 பேர் பலியாகி உள்ளனர்.
மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்று மட்டும் மேலும்   949 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,39,972 ஆக உயர்ந்தது.
கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 6 பேர் நேற்று இறந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,21,743 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது.
கடந்த 24மணி நேரத்தில்,  810 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,25,07,038 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.76% ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 11,191 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.03% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 6,66,660 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,86,30,62,546 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.