2021-22-ம் நிதியாண்டில் சேவை ஏற்றுமதி ரூ.18.75 லட்சம் கோடியாக உயர்வு மத்திய மந்திரி பெருமிதம்

புதுடெல்லி, 
நாட்டில் கொரோனா காரணமாக பயணம், சுற்றுலா, விமான போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தபோதும், சரக்கு மற்றும் சேவை ஏற்றுமதியில் இந்தியா மைல்கல் சாதனை படைத்திருப்பதாக மத்திய வர்த்தக மந்திரி பியூஸ்கோயல் பெருமிதத்துடன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், கடந்த 31-ந்தேதியுடன் நிறைவடைந்த 2021-22-ம் நிதியாண்டில் நாட்டின் சேவை ஏற்றுமதி முன்னெப்போதும் இல்லாத அளவாக 250 பில்லியன் டாலராக (சுமார் ரூ.18.75 லட்சம் கோடி) அதிகரித்து இருப்பதாக தெரிவித்தார்.

இதைப்போல சரக்கு ஏற்றுமதியும் 400 பில்லியன் டாலராக (சுமார் ரூ.30 லட்சம் கோடி) அதிகரித்து இருப்பதாக கூறிய பியூஸ் கோயல், இந்தியாவில் ஐ.பி.எல் ஜூரம் வாட்டி வதைப்பதை போல, சர்வதேச அரங்கில் இந்தியாவின் புகழும் புதிய உச்சங்களை எட்டுவதாக தெரிவித்தார்.
சேவைகள் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் நிர்வாக ஆலோசகர்கள், கணக்காளர்கள், நிறுவன செயலாளர்கள், என்ஜினீயர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்கள் போன்ற அனைத்து தொழில் வல்லுனர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.