இடி,மின்னல் தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கிய எல்.முருகன்

விருதுநகரில் இடி மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது சொந்த நிதியிலிருந்து தலா 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கினார்.
image

கடந்த 13 ஆம் தேதி கட்டுமானப் பணியில் இருந்த ஒரு பெண் உள்ளிட்ட தொழிலாளர்கள் நால்வர், இடி மின்னல் தாக்கி உயிரிழந்தனர். இந்நிலையில், நேற்று விருதுநகர் மாவட்டத்துக்கு ஆய்வுப்பணிகளுக்குச் சென்ற மத்திய அமைச்சர் எல்.முருகன், உயிரிழந்த நால்வரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். அவர்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து தலா 25 ஆயிரம் ரூபாயை வழங்கினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.