இலங்கை முன்னெப்போதும் இல்லாதவகையில் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உள்ளது.
தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் எரிபொருள், எரிவாயு, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
உணவுப் பொருட்களின் விலை குறைந்தது 30 வீதம் உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டொலர் தட்டுப்பாடு காரணமாக நாட்டில் பாரிய பிரச்சினைகள் உருவாகியுள்ளன.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நீண்ட நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்கள் உடன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு 8வது நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், இலங்கை எவ்வாறு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது என்பது குறித்து இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.