உபி.யை உலுக்கிய 5 பேரின் மரணம்: அகிலேஷ் யாதவ் கொந்தளிப்பு

பிரயாக்ராஜ்: உத்தரபிரதேசத்தில் மனைவி, 3 மகள்களை கழுத்து அறுத்துக் கொன்று கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் மாவட்டம், உள்ள நவாப்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ககல்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராகுல் திவாரி (42). இவருடைய மனைவி ப்ரீத்தி (38). இவர்களுக்கு மஹி, பிஹு மற்றும் போஹு என மூன்று பெண் குழந்தைகள். இந்நிலையில், நேற்று முன்தினம் ப்ரீத்தி மற்றும் மூன்று மகள்கள் படுக்கை அறையில் கழுத்து அறுக்கப்பட்டு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகவும், ராகுல் கழிவறையில் தூக்கில் சடலமாகவும் கிடந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடவியியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தடயங்களை சேகரித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், 7 தனிப்படைகள் அமைத்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.  ‘உத்தரப்பிரதேசம் மாநிலம் குற்றத்தில் மூழ்கி உள்ளது’ என்று சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். இதுகுறித்து ஏடிஜிபி பிரேம் பிரகாஷ் கூறுகையில், முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்னை காரணமாக மனைவி மற்றும் மகள்களை கணவரே கொன்றது தெரியவந்துள்ளது’ என கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.