'எரிபொருள் விலையை உயர்த்தப் போவதில்லை!' – பிரதமர் குட் நியூஸ்!

எரிபொருள் விலையை உயர்த்தப் போவதில்லை என, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்து உள்ளார்.

அண்டை நாடான பாகிஸ்தானில் 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால், மக்கள் கொந்தளிப்பார்கள் என கருதி, முந்தைய இம்ரான் கான் அரசு, எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கி வந்தது.

கொள்முதல் விலைக்கும், விற்பனை விலைக்கும் உள்ள வித்தியாசம் அடிப்படையில், டீசல் லிட்டருக்கு 41 ரூபாய்க்கும், பெட்ரோலுக்கு 24 ரூபாய்க்கும் மானியமாக கொடுத்து வந்தது. அதனால், தற்போது டீசல் விலை 144 ரூபாய் ஆகவும், பெட்ரோல் விலை 149 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கெஞ்சும் புடின் நண்பர் மனைவி: யார் இந்த விக்டர் மெட்வெட்சுக்?

புதிதாக பொறுப்பேற்றுள்ள ஷெபாஸ் ஷெரீப் அரசு, இந்த மானியம் வழங்குவதை நிறுத்தினால், டீசல் விலையை லிட்டருக்கு 51 ரூபாய் உயர்த்தி, 195 ரூபாய் ஆகவும் பெட்ரோல் விலையை 22 ரூபாய் உயர்த்தி, 171 ரூபாய் ஆகவும் விற்க வேண்டி இருக்கும் என்று எண்ணெய் மற்றும் எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம் கூறியிருந்தது.

இந்நிலையில் மக்களின் நலன் கருதி எரிபொருள் விலையை உயர்த்தப் போவதில்லை என, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். மானியம் வழங்குவது நிறுத்தப்பட்டால் எரிபொருள் விலை அதி விரைவாக உயரும் என்பதால், எரிபொருள் மற்றும் மின்சார மானியங்களை திரும்பப் பெறப் போவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.