ஐ.நா., பொதுச் செயலருடன் வெளியுறவு அமைச்சர் பேச்சு| Dinamalar

வாஷிங்டன்: ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரசுடன், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சர்வதேச நிலவரங்கள் குறித்து பேச்சு நடத்தினார்.

ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரசை, நம் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். இது குறித்து அவர் சமூக வலைதளம் ஒன்றில் கூறியிருப்பதாவது:அன்டோனியோ குட்டரசை சந்தித்து சர்வதேச நிலவரங்கள் குறித்து பேசினேன். உக்ரைன் போரால் உணவுப் பொருட்கள், கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்திருப்பது பற்றி இருவரும் விவாதித்தோம். சமகாலத்திய சவால்களை சமாளிக்க, ஐ.நா., இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக அன்டோனியா குட்டரசுக்கு பாராட்டுகளை தெரிவித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.