சுவாசிப்பதற்காக தன்மானத்தை என்றும் இழக்கமாட்டோம்… இளையராஜாவுக்கு எதிராக கொதித்த பிரபல இயக்குநர்!

மூடர் கூடம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நவீன் முகமதலி. தயாரிப்பாளராகவும் வலம் வரும் நவீன், தற்போது விஜய் ஆண்டனி, அருண் விஜய் மற்றும் அக்ஷரா ஹாசன் நடிக்கும் அக்னி சிறகுகள் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நவீன், அவ்வப்போது சினிமா, அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து டிவிட்டி வருகிறார். இந்நிமலையில் இசைஞானி
இளையராஜா
, பிரதமர் மோடி குறித்து எழுதிய முன்னுரைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் நவீன்.

Vijay: லெட்டர் எழுதி வைத்துவிட்டு ஓடிப்போன நடிகர் விஜய்… அம்பலப்படுத்திய அப்பா!

அதாவது, BLUEKRAFT DIGITAL FOUNDATION என்ற அமைப்பு அம்பேத்கரும், மோடியும் என்ற தலைப்பில் புத்தகத்தை வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்திற்கு இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அதில் பிரதமர் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டுள்ள இளையராஜா, அம்பேத்கர் இருந்திருந்தால் மோடியை பார்த்து பெருமைப்பட்டிருப்பார் என புகழாரம் சூட்டியுள்ளார்.

ஒரு ம***… லாயக்கு இல்லன்னு என்னை அறைந்தார்… விஜய்யின் அப்பா உருக்கம்!

இளையராஜாவின் இந்த முன்னுரைக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. அந்த வகையில் இயக்குநர் நவீன் முகமதலியும் இளைய ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், இளையராஜா தமிழர்களை தாலாட்டிய தாய். தவறிழைத்தவர் தாயாயினும் சுட்டிக்காட்டும் பிள்ளைகளே அறிவார்ந்த சமூகமாக இருக்க முடியும். அவர் கருத்தை வெறுக்கிறோம், அவரை அல்ல. ராஜாசார் இசை எங்கள் மூச்சு. அய்யா அம்பேத்கர் எங்கள் தன்மானம். சுவாசிப்பதற்காக தன்மானத்தை என்றும் இழக்கமாட்டோம் என தெரிவித்துள்ளார்.

நவின் முகமதலியின் இந்த பதிவுக்கு எதிர்ப்பும் ஆதரவும் எழுந்துள்ளது. நவீனின் டிவிட்டை பார்த்த இந்த ரசிகர், இளையராஜா சொன்னது தான் சரி. முத்தலாக் முறையை ஒழிக்க சட்டம் கொண்டுவந்து பல லட்சம் பெண்களின் வாழ்வில் ஒளி ஏற்படுத்திய மோடி கூட ஒரு அம்பேத்கார்தான் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.