தலைநகரில் பரபரப்பு – ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறை!

டெல்லியில், ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நடந்த ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தலைநகர் டெல்லியில் இன்று
ஹனுமன் ஜெயந்தி
நிகழ்ச்சியையொட்டி,
ஜஹாங்கீர்புரி
என்ற இடத்தில், ஊர்வலம் சென்றது. அப்போது இரு சமுதாயத்தினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டதையடுத்து வன்முறையாக மாறியது. இதில் பல போலீசார் காயம் அடைந்தனர். காயம் அடைந்த போலீசார் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

கலவரக்காரர்கள் கல்வீச்சு மற்றும் ஆயுதங்களை கொண்டு தாக்கினர். இச்சம்பவத்தில் வாகனங்கள் சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் போலீசார் அப்பகுதியில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரத்தையொட்டி அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

இது குறித்து
டெல்லி
போலீஸ் அதிகாரி அன்யேஷ் ராய் கூறியதாவது, “ஹனுமன் ஜெயந்தி நிகழ்ச்சியையொட்டி நடந்த ஊர்வலத்தில் இரு பிரிவினர் மோதலில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து கல்வீச்சிலும் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது” தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து, டெல்லி காவல் துறை அதிகாரிகளிடம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தார். வன்முறையைத் தொடர்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், விவகாரத்தை உணர்வுபூர்வமாகக் கையாளவும் அவர் அறிவுறுத்தினார். கல் வீச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்து அமைதியைக் காக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.