பசில் நலமுடன் உள்ளார்: வெளியான புதிய தகவல்



கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நலமுடன் இருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசில் மற்றும் அவரது மனைவிக்கு நேற்று கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை போடவில்லை எனவும், அவரது மனைவிக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.