கருங்கடலில் மூழ்கிய ரஷ்யாவின் அதிபயங்கர மற்றும் முதன்மை போர் கப்பலான மாஸ்க்வாவில் இருந்து உயிர் பிழைத்ததாக அறிவிக்கப்பட்ட ரஷ்ய மாலுமிகளை முதல் முறையாக உலகிற்கு அந்த நாடு வெளிக்காட்டியுள்ளது.
உக்ரைன் மீதான தாக்குதலில் முன்னிலை வகித்த ரஷ்யாவின் போர் கப்பல் “மாஸ்க்வா” சில நாள்களுக்கு முன்பு அதிலிருந்த வெடிமருந்து வெடித்ததில் சேதமடைந்து, பின் அதனை துறைமுகத்திற்கு இழுத்து வரும் போது கடல் சீற்றத்தில் சிக்கி தண்ணீருக்குள் மூழ்கிவிட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து இருந்தது.
இதற்கு மாறாக ரஷ்யாவின் சோவியத் கால போர் கப்பலை தங்கள் நாட்டு ராணுவத்தின் கப்பல் தடுப்பு நெப்டியூன் ஏவுகணைகள் மூலமே அழித்ததாகவும் அதில் அந்த கப்பலின் தளபதி அன்டன் குப்ரின் கப்பலில் கொல்லப்பட்டதாகவும் உக்ரைன் தெரிவித்து வருகிறது.
The Russian Defense Ministry published a video, which, according to the ministry, shows the meeting of Admiral Nikolai Yevmenov, Commander-in-Chief of the #Russian Navy, with the crew of the cruiser “Moskva” in #Sevastopol. pic.twitter.com/2sBeEiXEvB
— NEXTA (@nexta_tv) April 16, 2022
இருப்பினும், கருங்கடலின் தண்ணீருக்குள் மூழ்கிய மாஸ்க்வா-வில் இருந்த 510 வீரர்களையும் ரஷ்யா உயிருடன் மீட்டுவிட்டதாக ஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.
ஆனால் அமெரிக்கா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் அதற்கு எதிராக, மாஸ்க்வா கப்பலின் மாலுமிகள் பெரும்பாலானோர் கப்பல் மூழ்கும் போதே உயிரிழந்து விட்டதாக தொடர்ந்து தெரிவித்து வருகிறது.
இந்தநிலையில், ரஷ்ய துறைமுகமான செவாஸ்டோபோலில் மாஸ்க்வா கப்பலின் மாலுமிகள் அணிவகுத்து நிற்க, அவர்களை ரஷ்ய கடற்படையின் தலைமைத் தளபதி அட்மிரல் நிகோலே யெவ்மெனோவ் அவர்களால் மேற்பார்வையிட்டார்.
மேலும் மாஸ்க்வா கப்பலில் இருந்து மீட்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாலுமி குழுக்கள் ரஷ்ய நாட்டிற்காக தங்கள் சேவையை தொடர்வார்கள் என யெவ்மெனோவ் தெரிவித்ததாக அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் மிகப் பயங்கரமான மற்றும் சோவியத் கால போர் கப்பல் தண்ணீருக்குள் மூழ்கிய பிறகு அதன் மாலுமிகள் முதல் முறையாக வெளியில் தென்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய கைதிக்கு மாற்றாக…ரஷ்ய சார்பாளர் மனைவியின் ஒப்பந்தம்: போரிஸ் செய்வாரா?