ரயில்வே திட்டங்களை செயல்படுத்த கோரி பாமகவினர் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்டு, பணிகள் துவங்கப்படாமல் உள்ள ரயில்வே திட்ட பணிகளை ஒன்றிய அரசு விரைந்து செயல்படுத்த கோரியும், இதுதொடர்பாக, ஒன்றிய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் தர கோரியும், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் காரணை ராதா தலைமை  தாங்கினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், 100-க்கும் மேற்பட்ட பாமகவினர் கலந்து கொண்டு, பதாகைகள் ஏந்தியவாறு, கண்டன கோஷங்களை எழுப்பினர்.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.