வணிக வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூடு: பலர் காயமடைந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல்!


தெற்கு கரோலினா மாகாணத்தின் கொலம்பியா நகரில் உள்ள வணிக வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பலர் காயமடைந்து இருப்பதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை மதியம் அமெரிக்காவின் கொலம்பியா நகரில் உள்ள வணிக வளாகத்தில் திடீரென துப்பாக்கி சூடு நடைபெற்றதை தொடர்ந்து, பலர் இதில் படுகாயம் அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ள கொலம்பியா காவல்துறை, கொலம்பியானா மையத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் பலர் காயமடைந்து இருப்பதாகவும், அவர்களுக்கான மருத்துவ உதவிகள் வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும்
இதுவரை காயமடைந்தவர்களின் அளவு குறித்து சரியாக தெரியவில்லை எனவும், வணிக வளாகத்தில் வன்முறை சம்பவம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து வணிக வளாகத்தில் நடைபெற்ற வன்முறையில் காயமடைந்தவர்கள் துப்பாக்கி சூட்டினால் தான் நடைபெற்றதா என்று சரியாக இதுவரை தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு இருப்பதாக பொலிஸார் உறுதிப்படுத்தி அறிக்கைகள் வெளி வருவதற்குள் சில பொலிஸார் தெரிவித்த தகவல்கள் முதன்மை அறிக்கைகளாக வெளிவந்துள்ளன.

இந்தநிலையில், வன்முறை சம்பவம் நடைபெற்ற வணிக வளாகத்தின் முதன்மை கதவு அடைக்கப்பட்டு இருப்பதுடன் I-26 தெற்கு பகுதியும் அடைக்கப்பட்டுள்ளது மற்றும் பொதுமக்கள் அந்த பகுதியில் இருந்து அவசரஅவசரமாக வெளியேறி வருகின்றனர்.  

பிரித்தானிய கைதிக்கு மாற்றாக…ரஷ்ய சார்பாளர் மனைவியின் ஒப்பந்தம்: போரிஸ் செய்வாரா?



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.