1லட்சம் விவசாய மின்இணைப்பு பெற்ற விவசாயிகளிடம் கலந்துரையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின் – வீடியோ

சென்னை: விவசாய மின்இணைப்பு பெற்ற 1லட்சம் விவசாயிகளிடம்  முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார். அது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் இலவச மின்சாரம் வேண்டி விண்ணப்பம் செய்த விவசாயிகளுக்கு உடனே மின்சாரம் வழக்க ஆணையிடப்பட்டது. அதன்படி முதல்கட்டமாக ஒரு லட்சம் விவசாயிகளுக்க இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம்  2021 செப்டம்பர் 23-ல் தொடங்கி வைக்கப்பட்டது.

அதன்படி, ஒரு லட்சம் விவசாய மின்இணைப்பு பெற்ற விவசாயிகளிடம் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். சென்னையில் மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் விவசாயிகளிடம் பேசினார். ஒரு லட்சம் மின்இணைப்பு திட்டத்தில் கடைசி 100 பேருக்கு மின்இணைப்பு ஆணைகளை வழங்கி முதல்வர் பேசினார்.

வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://twitter.com/i/broadcasts/1lDxLLARypRxm

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.