அமைச்சர் ராஜினாமா ஏற்பு: ஆளுநர் அறிவிப்பு!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் இண்டல்கா பகுதியைச் சேர்ந்தவர்
சந்தோஷ் பாட்டீல்
. ஒப்பந்தகாரரான அவர், பாஜக பிரமுகராகவும் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊரக வளர்ச்சித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட அரசு வளர்ச்சிப் பணிகளுக்கான டெண்டரை எடுத்த இவர், அந்த பணிகளை செய்து வந்துள்ளார்.

இதையடுத்து, தனக்கு சேர வேண்டிய ஒப்பந்தப்பணிக்கான தொகையை விடுவிக்கும்படி ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் அலட்சியம் காட்டியுள்ளதாக தெரிகிறது. அதன் தொடர்ச்சியாக, தனக்கு சேர வேண்டிய தொகையை விடுவிக்க ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்
ஈசுவரப்பா
40 சதவீதம் கமிஷன் கேட்பதாக சந்தோஷ் பாட்டீல் குற்றம் சாட்டினார்.

இதனிடையே, ஒப்பந்தகாரர் சந்தோஷ் பாட்டீல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு அவர் எழுதி வைத்த கடிதத்தில், தனது சாவுக்கு அமைச்சர் ஈசுவரப்பாதான் காரணம் என்றும், தன்னிடம் அவரது ஆதரவாளர்கள் கமிஷன் தொகை கேட்டு மிரட்டி தொல்லை கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஈசுவரப்பா மீது உடுப்பி டவுன் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரை மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். தொடர்ந்து, அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மையை நேற்று முன் தினம் சந்தித்த ஈசுவரப்பா தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

அந்த ராஜினாமா கடிதத்தை முதல்வர் பசவராஜ் பொம்மை, உடனடியாக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டுக்கு அனுப்பி வைத்தார். இந்த நிலையில், ஈசுவரப்பாவின் அமைச்சர் பதவி ராஜினாமாவை ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அங்கீகரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் பதவியை ஈசுவரப்பா ராஜினாமா செய்திருப்பதற்கான கடிதத்தை எனக்கு முதல்வர்
பசவராஜ் பொம்மை
அனுப்பி வைத்திருந்தார். அந்த ராஜினாமாவை நான் அங்கீகரித்துள்ளேன். இது உடனடியாக அமலுக்கு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.