இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 21 ஆம் தேதி இந்தியா வருகை

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அரசுமுறைப் பயணமாக முதல்முறையாக இந்தியாவுக்கு வருகிறார்.

21 ஆம் தேதி டெல்லி வரும் அவர் 22 ஆம் தேதி குஜராத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்று இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய போரிஸ் ஜான்சன் தமது இந்தியப் பயணம் இருநாடுகளுக்கும் வேலைவாய்ப்பு பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களுக்கு வழி வகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு இந்தோ பசிபிக் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளிலும் இந்தியாவும் பிரிட்டனும் இணைந்து செயல்படும் என்றும் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.