இன்று முதல் 21 வரை மின் தடை| Dinamalar

பெங்களூரு-‘கேபிள் பதிக்கும் பணிகள் நடப்பதால், இன்று முதல் வரும் 21 வரை பல பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது’ என, ‘பெஸ்காம்’ எனும் பெங்களூரு மின்சார வினியோக நிறுவனம் அறிவித்துள்ளது.பெஸ்காம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:இன்று காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை பல்லகரே சாலை, வர்த்துார் பிரதான சாலை, ஹலசள்ளி சாலை, ஹலசள்ளி கிராஸ் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.ஏப்ரல் 19: காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை குன்ஜுர், குன்ஜுர் ஹொசஹள்ளி, குன்ஜுர் பிரதான சாலை, கிருபாநிதி கல்லுாரி சாலை.ஏப்ரல் 20: காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை சென்னசந்திரா, எப்.சி.ஐ. கவுடன், சபாய், வி.எஸ்.ஆர். லே – அவுட், கொரலுார், திம்மெஷட்டிஹள்ளி, போதகாக்கனஹள்ளி, ஹொசஹள்ளி, சவுகியா சாலை, ஹெமன்தனஹள்ளி.ஏப்ரல் 21: காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை பிரசாந்த் லே – அவுட், உப்கார் லே – அவுட், பிருத்வி லே – அவுட், சுவாமி விவேகானந்தா சாலை, ஒயிட்பீல்டு பிரதான சாலை, இ.சி.சி. சாலை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுஉள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.