இளையராஜா தனது கருத்துகளை வெளியிட்டதற்காக அவரை சுடு சொற்களால் விமர்சிக்கலாமா – தமிழிசை சௌந்தரராஜன் 

இசைஞானி இளையராஜா தனது அடிமனதில் இருந்து வெளிவந்த கருத்துகளை வெளியிட்டதற்காக அவரை சுடு சொற்களால் விமர்சிக்கலாமா என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வேதனை தெரிவித்துள்ளார். 

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், இணையற்ற இசைஞானி இளையராஜா பார்புகழும் பாரத பிரதமரை அண்ணல் அம்பேத்கருடன் ஒப்பிட்டு, அவர்தம் அடிமனதில் இருந்து வெளிவந்த உணர்வுகளை வெளியிட்டதற்காக தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்கும் சிலர் அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்து சுதந்திரம் சில கருத்துகளுக்கு மட்டுமா? அல்லது சிலருக்கு மட்டும் தானா? என்றும் கேள்வி எழுப்பியுள்ள அவர், தன் கருத்தை சொல்ல இசைஞானி இளையராஜாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்பதை உரக்க சொல்வோம் என்றும் விழித்துக்கொள் தமிழகமே என்றும் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.