புதுச்சேரி : ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்துவ தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் பாடுபட்டு மரித்த காலத்தை உலகம் முழுவது கிறிஸ்துவர்கள் 40 நாட்கள் தவகாலத்தினை கடைபிடிப்பது வழக்கம்.கடந்த மார்ச் 2ம் தேதி கிறிஸ்துவர்களின் தவக்காலம் துவங்கியது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்தநாள் புனித வெள்ளி என்றும், உயிர்த்தெழுந்த தினம் ஈஸ்டர் பண்டிகை என்றும் அழைக்கப்படுகின்றது.
புனித வெள்ளியான 15 ம்தேதி கிறிஸ்துவ ஆலயங்களில் இயேசுவின் பாடுகளை சித்தரிக்கும் சிலுவைபாதை நிகழ்ச்சி நடந்தது.ஈஸ்டர் பண்டிகையையொட்டி நேற்று நள்ளிரவு 12.௦௦ மணிக்கு புதுச்சேரியில் உள்ள கிறிஸ்துவ ஆலயங்களில் உயிர்ப்பு பெருவிழா நடந்தது. மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடந்தது.
கொரோனா பிரச்னையால் கடந்த இரண்டு ஆண்டுகளாக உற்சாகமின்றி நடந்த ஈஸ்டர் பண்டிகை இந்தாண்டு கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
புதுச்சேரி : ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்துவ தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடந்தது.இயேசு கிறிஸ்து சிலுவையில் பாடுபட்டு மரித்த காலத்தை உலகம் முழுவது கிறிஸ்துவர்கள் 40
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.