ஐ.பி.எல். தொடர் – லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுலுக்கு ரூ.12 லட்சம் அபராதம் .!

ஐ.பி.எல். தொடரில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக அந்த அணியின் கேட்பன் கே.எல்.ராகுலுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Brabourne மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் லக்னோ அணி 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. மும்பை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் இலக்கை எட்ட முடியாமல் தொடர்ந்து ஆறாவது முறையாக தோல்வியை தழுவியது.

இந்த நிலையில், போட்டியில் லக்னோ அணி பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக, அதன் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு 12லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

லக்னோ அணி இதுவரை 4 போட்டிகளை வென்று 8 புள்ளிகளுடன் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் சேர்ந்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.

நேற்றைய போட்டி லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு நூறாவது ஐ.பி.எல். போட்டி என்ற நிலையில், அதில் அவர் சதம் அடித்து சாதனை படைத்திருக்கிறார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.