பாஜக அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு, திருப்பூர் குமார் நகரில் நேற்று நடைபெற்றது.
மாநில இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பேசும்போது, “வளர்ச்சிக்கான ஆட்சியை பிரதமர் மோடி முன்னெடுத்துள்ளார். இங்குள்ள அரசியல்கட்சிகளை போல, ஜாதி, மதத்தை முன்னிலைப்படுத்தவில்லை. வரும் 20-ம் தேதி வரை, சமூக நீதிக்கான தலைப்பில்விவசாயிகள், சாலையோர தொழிலாளர்கள் உட்பட அனைவரையும் சந்தித்து நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 2 ஆயிரம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவி செய்யப்பட்டுள்ளது.
பாஜகவின் ஏழரை ஆண்டு கால ஆட்சியில், ரூ.7.5 லட்சம் கோடிக்கான நலத்திட்டங்களை தமிழகத்துக்கு மட்டும் பிரதமர் வழங்கியுள்ளார். திருப்பூரில் மத்திய அரசின் மூலமாக உள்கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்படுகின்றன. . திமுகவுக்கு குடும்ப முன்னேற்றம்தான் முக்கியம்.
தமிழகம், தெலங்கானா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் ஆட்சிபுரியும் அரசுகள் குடும்பத்துக்காக பாடுபடுகின்றன” என்றார்.