கொரோனா காரணமாக கடந்த இரண்டாண்டுகளாக நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை, பெரும்பாலான நாட்களில் வகுப்புகள் ஆன்லைன் மூறையிலேயே நடைபெற்றது. தேர்வுகளும் ஆன்லைன் வாயிலாகவே நடத்தப்பட்டன.
இந்த நிலையில் இந்த ஆண்டாவது நேரடி வகுப்புகள் நடைபெறுமா என பெற்றோரும், மாணவர்களும் எதிர்பார்த்திருந்தபோது கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா மூன்றாவது அலை வந்து அச்சுறுத்தியது. சில மாதங்களில் ஒரு வழியாக அந்த அலை அடங்கிய பிறகு பிப்ரவரி மாதம் முதல் மீண்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
விரைவில் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், இரண்டு மாதங்கள்
கோடை விடுமுறை
அறிவித்து மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது
ஆந்திர மாநில அரசு
.
அங்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 22 ஆம் தேதி தொடங்கி மே 4 ஆம் தேதி நிறைவடைகிறது. இதனையடுத்து 1-9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 9 ஆண் தேதி முதல் ஜுலை 3 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட இரண்டு மாதங்கள் கோடை விடுமுறை விடப்பட உள்ளதால் மாணவர்கள செம ஹேப்பி மோடில் உள்ளனர்.
தமிழகத்தில் இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு மே மாதம் 13 ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை மட்டுமே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.