சினிமா ஷூட்டிங்கின் போது பாலிவுட் நடிகர் போக்குவரத்து விதிமீறல்: போலீசார் நடவடிக்கை

கான்பூர்: சினிமா ஷூட்டிங்கின் போது உத்தரபிரதேசத்தில் போக்குவரத்து விதிமீறில் சென்ற பாலிவுட் நடிகருக்கு அபராத சலானை போலீசார் அனுப்பி உள்ளனர்.  உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தனது அடுத்த படமான ‘பவால்’ படப்பிடிப்பில் பாலிவுட் நடிகர் வருண் தவான் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கான்பூரின் ஆனந்த் பாக் பகுதியில் மக்கள் நெருக்கமான இடத்தில் சினிமா ஷூட்டிங் எடுக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பு வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. அந்த வீடியோக்களில், அவர் ஹெல்மெட் அணிந்து பைக்கில் செல்கிறார். கருப்பு நிற பேன்ட், ஷூ மற்றும் கூல் சன்கிளாஸ்ஸுடன் நீல நிற சட்டை அணிந்து செல்வதை காணமுடிகிறது. இந்நிலையில் அவர் ஹெல்மெட் அணியாமல் பைக்கை ஓட்டிச் சென்றதால், வருண் தவானுக்கு உத்தரபிரதேச போலீசார் அபராத சலான் அனுப்பி உள்ளனர். மேலும், அந்த நோட்டீசில் பைக்கின் நம்பர் பிளேட்டில் விதிகளை மீறி எண்கள் எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மற்றுமொரு அபராத சலான் வழங்கப்படும் என்று போலீஸ் அனுப்பிய சலானில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.