வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: தலைநகர் டில்லியில், கடந்த 15 நாட்களில் கோவிட் பாதிப்பு 500 சதவீதம் அதிகரித்துள்ளது என சர்வே ஒன்றில் தெரிய வந்துள்ளது.
டில்லி மற்றும் என்சிஆர் பகுதியில், 11,743 குடியிருப்புகளில் ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ சர்வே ஒன்றை நடத்தியது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 67 சதவீதம் பேர் ஆண்கள், 33 சதவீதம் பேர் பெண்கள் கலந்து கொண்டனர்.
ஆய்வின் முடிவில் தெரியவந்திருப்பதாவது: கடந்த ஏப்.,2ம் தேதி நடத்திய ஆய்வில், கோவிட் பாதிப்புக்குள்ளானவர்களில், தங்களுக்கு நெருக்கமானவர்கள் வெறும் 3 சதவீதம் பேர் மட்டுமே இருந்தனர் என குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
அதுவே 15 நாட்களுக்கு பின், தற்போது ஆய்வு நடத்திய போது, 11 சதவீதம் பேர் ‘1 – 2’ பேருக்கு கோவிட் இருப்பதாகவும், 8 சதவீதம் பேர் ‘3-5’ பேருக்கு கோவிட் பாதிப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இது டில்லியில் கோவிட் பாதிப்பு 500 சதவீதம் அதிகரித்திருப்பதை உறுதி செய்துள்ளது. இவ்வாறு ஆய்வு முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
டில்லியில் நேற்று (ஏப்.,16), 461 பேருக்கு புதிதாக கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; 19 பேர் பலியாயினர். டெஸ்ட் எடுத்தவர்களில் 5.33 சதவீதம் பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement