டெல்லி உப்ஹார் திரையரங்கில் 24 வருடங்கள் கழித்து மீண்டும் தீவிபத்து

1997-ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 59 பேர் உயிரிழந்த டெல்லியில் உள்ள உப்ஹார் திரையரங்கில், இன்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் கிரீன் பார்க் என்ற பகுதியில் அமைந்துள்ள உப்ஹார் திரையரங்கில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திரையரங்கின் உள்ளே அடுக்கி வைக்கப்பட்டிருந்த நாற்காலிகள் மற்றும் மரப் பொருள்கள் வைக்கப்பட்டிரந்த இடத்தில் ஏற்பட்ட தீ ஏற்பட்டு, பின் திரையரங்கின் பால்கனி பகுதியில் அது முழுக்க பரவியுள்ளது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
image
கிட்டத்தட்ட 5 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியை மேற்கொண்ட நிலையில், இரண்டு மணி நேரத்திற்கு பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டிருக்கிறது. இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என தியேட்டர் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. ஏற்கனவே கடந்த 1997ஆம் ஆண்டு இதே திரையரங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் 59 பேர் உயிரிழந்திருந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அது தொடர்பான வழக்கு இன்றும் நீதிமன்றங்களில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்தி: கொரோனா மரணங்கள்: உலக சுகாதார நிறுவனம் கூறுவதை பின்பற்றுவது கடினம் – இந்தியாSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.