டெல்லியில் கடந்த 1997ஆம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டு 59 பேர் பலியான சம்பவத்தை அடுத்து மூடப்பட்டு கிடந்த உப்ஹார் திரையரங்கில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது.
கிரீன்பார்க் பகுதியில் அமைந்துள்ள அந்த திரையரங்கில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு, இருக்கைகள் தீப்பிடித்து எரியவே, 5 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. கடந்த 1997ஆம் ஆண்டு இதே உப்ஹார் திரையரங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 59 பலியான நிலையில், 100 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து கடந்த பல ஆண்டுகளாக உப்ஹார் திரையரங்கு மூடப்பட்ட நிலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.